போட்டிகளுக்கான விதிமுறைகள்
செல்லகுயில் மற்றும் வானம்பாடிகள்
போட்டிகளுக்கான விதிமுறைகள்
- இளம் செல்லக்குயில்: 5 வயது முதல் 11 வயது ஆண்/ பெண் சிறார்கள் பங்குபெறலாம்.
- செல்லக்குயில்: 12 வயது முதல் 18 வயது ஆண்/ பெண் சிறார்கள் பங்குபெறலாம்.
- வானம்பாடிகள்: 19 வயதும் அதற்கும் மேற்பட்ட ஆண்/ பெண் இருபாலாரும் பங்குபெறலாம்.
- போட்டிகளில் தமிழ் திரையிசைப் பாடல்கள் மட்டுமே பாடுதல் வேண்டும்.
- தெரிவுப் போட்டிகளின் முதற்சுற்றானது வானொலி நேரலை நேரங்களில் தொலைபேசி இணைப்பினூடாக அல்லது நேரடி குரல்த் தெரிவாக நடைபெறும்.
- முதற்சுற்றில் பாடிய பிற்பாடு எமது இணையத்தளத்திற்கு சென்று அங்கு கேட்கப்பட்டிருக்கும் தகவல்களை நிரப்பி அனுப்புதல் அவசியம். தவறும் பட்சத்தில் தெரிவுக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.
- தகுதிகாண் போட்டியார்கள் 15+15+10 (இ.செ + செ + வா) எனும் எண்ணிக்கையில் தெரிவுசெய்யப்படுவார்கள்.
- அரைஇறுதிப் போட்டியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் 2 பாடல்களை தெரிவுசெய்து எமக்கு அனுப்பவேண்டும்.
- ஒரே பிரிவில், இருவர் ஒரே பாடலை தெரிவுசெய்யும் பட்சத்தில் முதலாவதாக பாடலை பதிவு செய்தவருக்கே அந்த பாடலை பாடும் வாய்ப்பு கிடைக்கும். மற்ற போட்டியாளர் இரண்டாவது பாடல் தெரிவினை பாட வேண்டும்.
- இறுதிச் சுற்றுக்கான தகுதிகாண் போட்டி «கரோக்கே» பின்னணி இசையுடன் நேர்முக போட்டியாக நடைபெறும்.
- இறுதிப்போட்டிக்கான போட்டியாளர்கள் 5+5+5 எனும் அடிப்படையில் தெரிவுசெய்யப்படுவார்கள்.
- தகுதிகாண் போட்டி மற்றும் இறுதிப்போட்டிகளில் பங்கு பெறுபவர்களை துறைசார் நடுவர்கள் தெரிவுசெய்வார்கள்.
- இறுதிப்போட்டி தமிழ்முரசத்தின் பொன்மாலை பொழுது நிகழ்ச்சியின்போது இடம்பெறும்.
- இறுதிப்போட்டியின் வெற்றியாளர்களை நடுவர்கள் (70%) + பார்வையாளர் வாக்கு (30%) போன்றவையே தீர்மானிக்கும்.
- ஒரு பிரிவில் வெற்றி பெறுபவர் அதே பிரிவில் மீண்டும் போட்டியிடமுடியாது.
- Post published:14. juni 2019
- Post category:Ukategorisert
- Post author:Sri Thambi